நாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வானிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுசரணையில் இருந்து விலகியது இலங்கை; அறிவித்தார் தினேஷ்
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி
சீனாவில் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக COVID-19-ஆல் தொற்றுண்டதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது நேற்றைய 1,749 பேர் என்ற நிலையிலிருந்து 394ஆக இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நூல் அறிமுகம்: “ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி”
காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் “ஈழத்து தலித்திய” நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. “சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே…” என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.
கனடாவில் மண் மீட்பு போராட்டம்
(சாகரன்)
அமெரிக்காவை கண்டு பிடித்தார் கொலம்பஸ் என்று நாம் அறிந்தவரால் இவர்களின் வாழ்நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது முதலில். பின்பு வட அமெரிக்காவின் பல பகுதிகளை ஓருங்கிணைத்து உருவான கனடாவில் ரெசிடென்சல் ஸ்கூல்(Residential School என்று ஆரம்பித்து செவ்விந்தியக் குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்.
கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது.
‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்…
E-டிக்கெட் முறை அறிமுகம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்: 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது.