அமைச்சர் டக்ளஸ் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை பதவி விலக வேண்டும் என தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சும(த)ந்திரன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சா இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என கூறிவிட்டாராம்.

சாதிய வெறி

(Pushparani Sithampari)

இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தாது வருடப் பஞ்சம்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –

மணல் கொள்ளையர்களுக்கு உதவ மறுத்த ஒப்பந்தக்காரர்களுக்கு அச்சுறுத்தல்

தமக்கு உதவி செய்ய மறுத்த பாலம் புனரமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் களஞ்சிய அறைகள், மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பிரதான வீதியில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

மனிதம் இங்கும் வாழ்கின்றது

எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .

அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .

அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .
தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.

அஸ்ஸாமில் தீவிரமடைந்துள்ள போராட்டம்

இணைய சேவை துண்டிப்பு

விமான சேவைகள் இரத்து

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூக்குத் தண்டனை!

12 வருடங்களுக்குப் பின்னர் நீதித்துறை அளித்த தீர்ப்பு!

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 75 வயதான பர்வேஸ் முஷர்ரப் பாகிஸ்தானில் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அந்நாட்டு ஜனாதிபதி பதவியில் இருந்தார்.

“எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதா தண்ணீரை ஊற்றி அணைப்பதா”

(கருணாகரன்)
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிறகு, கிளிநொச்சிக்குச் சில சிங்கள நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகையின் நோக்கம், “மதக வன்னி” (Mathaka Wanni) என்ற என்னுடைய சிங்களப் புத்தகத்தைப்பற்றிய உரையாடலைச் செய்வதும் என்னைச் சந்திப்பதுமே. ஆனால், பேச்சு அரசியற்பக்கமாகவும் திரும்பியது. அப்பொழுது அவர்களிடம் கேட்டேன், “ஜனாதிபதித்தேர்தலின் முடிவுகளைப்பற்றி உங்களுடைய பார்வை என்ன? சிங்கள மக்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?” என்று.