நேட்டோவின் 70 ஆண்டுகள்: குருதி தோய்ந்த வரலாறு
எதிர்க் கட்சித் தலைவராக சஜித்
பெண் மருத்துவர் கொலை : 4 சந்தேக நபர்களும் சுட்டுக்கொலை
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த 27ஆம் திகதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்திரிகா அரசியலுக்கு ‘குட்பாய்’
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர், அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார் என்று, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது”
வெனிசுலா குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு?
வெனிசுலாவின் ஆட்சி மூர்க்கர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவைப் பட்டினியால் வாடும் தோல்வியடைந்த நாடாக அவர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். டேனியலா செரேனோ தனது பெண் குழந்தை டைஷாவுக்காக அழுகிறார் – அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கும் இதில் பொறுப்புள்ளதா என்று என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் திறப்பு
குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டன. அச்சுவேலி – இடைக்காட்டு பகுதியூடாக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம் பாயலாம் எனும் அபாயத்தால் குறித்த வான்கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. வான் கதவை யாழ். மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சர்வ ராஜா உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர். அத்துடன், தொண்டைமானாறு கடற்பகுதியில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதற்கான முனை பிரதேசம் தொண்டைமானாறு அக்கறை பிரதேச மக்களால் கால்வாயாக வெட்டி விடப்பட்டது.
’13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது’
சறோவின் இழப்பு: ஆற்றுப்படுத்த முடியாத துயரம்
(சாகரன்)
1970 இன் பிற்கூற்றில் ஏற்பட்ட நட்பு. நீ எம்மை விட்டுப்பிரியும் வரை இடையறாது தொடர்ந்த நட்பு உறவு. இளைஞனாக தனித்தவனாக ஆரம்பித்த உறவு எனது மனைவியை நான் காதலியாக பெற்றபோது விரிவடைந்த நட்பு. அது என் திருமணத்தின் பின்பும் சறோவின் திருமணத்தின் பின்பும் குடும்ப நட்பாக தொடர்ந்த உறவு. உடன் பிறந்த சகோதரி போல் வளர்ந்த நட்பு.