1931 செப்டம்பர் 22.
வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் வந்திருந்த காந்தியை இந்த நாளில் நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின்.
டாக்டர் கத்யால் வீட்டில் இந்த
வரலாற்றுச் சந்திப்பு நிகழ்ந்தது.
The Formula
(சாகரன்)
மகாத்மா காந்தியின் 150 ஆண்டு விழா உலகெங்கும் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எளிமையின் அடையாளமாகவும், சத்திய சோதனைக்குள் எம்மையே உள்படுத்தி எதிரியை வெற்றி கொள்வது இதற்கு சத்தியாகிரகத்தில் ஈடுபடுதல், இதற்கான மக்களை அணிதிரட்ட நடைபவனியாக மக்களிடம் செல்லல் என்ற பொறிமுறையை கையாண்டவர். சுதேசிய உற்பத்திகளை பாவித்தல் என்பதற்கூடாக ஆக்கிரமிப்பு தயாரிப்புகளை நிராகரித்து வியாபாரம் என்ற வகையில் நாடு பிடித்து காலனி ஆதிக்கத்தை நிறுவியவர்களை செயல் இழக்கச் செய்தல் என்பதை தந்திரோபாயத்தை கையாண்டு வெற்றியும் கண்டவர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (04) முற்பகல், தேர்தல்கள் செயலகத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் “அன்னம்” சின்னத்துக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவ, இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுள்ளார். இதன்போது, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே குறித்த இருவருக்கும் இன்று (30) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.