வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக் கொண்டுவிடும். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். இதனால் முடி பிரச்சினைகள் நீங்கும்.

மாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்

மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

வெள்ளவத்தை மோதல்; மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்னை விமர்சிக்கும் முன் தமிழரசுக் கட்சித் உறுப்பினர்களான சேனாதி சிறீதரன் சரவணபவன் ஆகியோர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ச

தமிழ்த் தலைமைகள் சேறுபூச விளைந்தால் தமிழ் மக்களின் முன் ஒவ்வொருவரின் முகத்திரைகளும் கிழிக்கப்படும் – நாமல் சூளுரை
2019-08-03
எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை

‘தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’ என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது

மஹிந்தவுடன் ஈரோஸ் இணைந்தது

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

திண்ணைப் போர்

(கே. சஞ்சயன்)
‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஒரு ‘பிடி’ பிடித்திருந்தார். ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்ற பழமொழி, அரசியலுக்கே நன்கு பொருந்தும். அரசியலில் இவ்வாறான எதிர்பார்ப்புகள் பலரிடம் இருப்பது உண்மை. எல்லோராலும் அரசியலில் வெற்றியைப் பெறமுடியாது.

மனிதனின் ஆயுள் 300 ஆண்டு.

பிறந்த முயல் குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து விடுகிறது மீண்டும் குட்டி போட ஆரம்பித்து விடுகின்றது, அதனுடைய ஆயுள் 60 மாதம்,

பிறந்த ஆட்டுக்குட்டி அரை வருடத்தில் வயதுக்கு வந்து குட்டி போட ஆரம்பிக்கின்றது, ஆடுகள் சுமார் 10 ஆண்டுகள் உயிர் வாழும்

ஒரு பசு மாட்டின் கன்று பிறந்த ஒரு வருடத்தில் பருவம் அடைந்து கன்று போட ஆரம்பிக்கின்றது, பசு மாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள் ஆகும்,

விக்கினேஸ்வரன் அவர்களுக்கு

(Vijaya Baskaran)

நீதிபதியான நீங்கள் அரசியலில் கால் பதிக்க. முயன்றபோது எல்லோரும் நீதிமான் சட்டம் தெரிந்தவர் மக்கள் உரிமைகளை மீட்டுத்தருவீர்கள் என நம்பினார்கள்.ஆனால் பதவியில் இருந்து காலத்தை கழித்தீர்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.உங்களை நம்பி வாக்களித்தவர்களை ஏமாற்றிவிட்டீர்கள்.

பிரிட்டனை எங்கே கொண்டுபோய் விடுவார் போரிஸ் ஜான்ஸன்?

வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார் போரிஸ் ஜான்ஸன். பதவியேற்ற பிறகு டௌனிங் தெருவில் அவர் ஆற்றிய உரையிலேயே அரசு செல்லவிருக்கும் திசை வெளிப்பட்டது. “இனி ‘ஒருவேளை, ஆனால்’ என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை; அக்டோபர் 31-க்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது உறுதி” என்று முழங்கியவர், ஐரோப்பிய ஒன்றிய வெறுப்பாளர்களுக்குப் புதிய அமைச்சரவையில் இடமளித்தது சந்தேகமில்லாமல் இது ‘பிரெக்ஸிட் ஆதரவு அரசு’ என்பதை உறுதியாக்குகிறது.