நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர் சிக்கனத்தை முன்னெடுக்கும் பிளம்பர்கள் சங்கம்!


(The Hindu)
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் படும்பாடு நாமெல்லாம் அறிந்ததுதான். எனவேதான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் சிக்கனத்தை பெரிய இயக்கமாக முன்னெடுக்கிறது இந்திய பிளம்பர்கள் சங்கம்.

நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம்: சகிப்புத்தன்மையை உறுதி செய்யவேண்டும் – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் இன்று நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதை எழுப்பிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பியான சு.வெங்கடேசன், சகிப்புத்தன்மையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

சுடு தேநீரும் சுடலை ஞானமும்

பௌத்த பேரினவாதம், இந்து மக்களிடம் கோரிய ஒற்றுமை, எத்தகையது என்பதைக் கடந்த வாரம், கன்னியா நிகழ்வுகள் உணர்த்தி இருக்க வேண்டும். காலச்சக்கரம் மெதுமெதுவாக நகர்ந்து, கல்முனையில் இருந்து கன்னியா நோக்கி வந்துள்ளது. கல்முனையில் களமாடியவர்களே, கன்னியாவிலும் களமாடினார்கள். கல்முனையில் பேசிய அதே குரல்கள்தான், கன்னியாவிலும் பேசின.

6வது ஆண்டு நினைவில் …………

தோழர் சுதன் EPRLF இன் ஆரம்பகால பிரச்சார ,இராணுவ நடவடிக்கைகளில் பிதான பாத்திரம் வகித்தவர். இரானுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல்களுக்கு மத்தியில்
தோழர் றொபேட்டுடன் இனைந்து வடகிழக்கில் பிரதான வேலைத்திட்டங்களில் ஆரவாரமின்றியும் உறுதுனையாகவும் கருமமாற்றியவர். அவரிடம் எத்தகைய சந்தர்ப்பத்திலும் பதட்டத்தையோ அச்சத்தையோ காணமுடியாது . இவர் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தோழர் றொபேட் தோழர், ரமேஸ், தோழர் மோகன், தோழர் குமார்(வோல்ட்டன்) போன்றவர்களுடன் இனைந்து பணியாற்றியுள்ளார் .தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த அவர் நீரிழிவு நோயின் பாதிப்பால் 25.07.2013 அன்று எம்மைவிட்டுப் பிரிந்தார். அவருக்கு எமது அஞ்சலிகள்.

மூதூர் பிரதேச பிரிப்பு சம்மந்தமாக…

தற்போது மூதூர் பிரதேச செயலக விடயம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது. தோப்பூர் என்ற புதிய பிரதேச செயலகம் உருவாக்கம் நிறைவடையும் நிலையில் தோப்பூர் பிரதேச செயலக எல்லைக்குள் கீழ்க்காணும் தமிழ் கிராமங்கள் இனணக்கப்பட்டுள்ளததாக அறியக் கிடைத்துள்ளது.

ஜூலைக் கலவரம் தந்த பயன்களும் வீணாகிவிட்டன

(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த ‘கறுப்பு ஜூலை’ என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்கள் ஆரம்பித்து, இன்றோடு 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அந்தக் கொடுமைக்கு மூலகாரணமாக அமைந்த இனப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வொன்று இன்னமும் காணப்படவில்லை.

சுதந்திரக் கட்சி ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், இலங்கையில் முதல் தடவையாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று, 36 வருடங்கள் கடந்துவிட்டதை நினைவுக்கூர்ந்தும், கலவரத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

’தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இல்லை’

குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன், ஐ.எஸ் அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், இன்று சாட்சியம் வழங்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்?

(Karunakaran)

இன்று தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் அதனுடைய அரசியலையும் ஆதரிக்கின்ற எழுத்தாளர்கள் மற்றும் கலை வெளிப்பாட்டாளர்களில் எத்தனைபேர் அந்த அரசியலின் வழி மக்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்? (இதில் போராளிகள் விலக்கு) தொடர்ந்து பங்கேற்கின்றனர்? எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்? எவ்வளவு பேர் மக்களோடிணைந்து எளிய வாழ்க்கையை வாழ்கின்றனர்? மக்கள் சந்தித்த, சந்திக்கும் நெருக்கடிகளில் தம்மையும் இணைத்தவர்கள் யார் யார்? இழப்புகளையும் வலிகளையும் நேரடியாகச் சந்தித்தவர்கள், தாங்கியவர்கள் எத்தனைபேர்? எத்தனைபேர் சமூகப் பிரச்சினைகளிலும் சமூகத்தில் நிலவும் சாதி, பிரதேச வேறுபாடு, பால் நிலை ஆதிக்கம் போன்ற அசமத்துவ நடைமுறைகளுக்கு எதிராகப் போரிடுகின்றனர்?

மனோகணேசனால் முடியுமென்றால் கூட்டமைப்பால் ஏன் முடியாது?: முன்னாள் முதலமைச்சர் கேள்வி!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமலிருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை என இணைந்த வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ. வரதராஜப் பெருமாள் கேள்வியெழுப்பியுள்ளார்.