தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பது உண்மை – வடக்கு கிழக்கு மாகாண முன்னாள்முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்

(காணொளியை பார்க்க….)

ஜூலை 16 நூற்றாண்டு தின நிகழ்வின் நினைவூட்டல்

ஜூலை 16 நூற்றாண்டு தின நிகழ்வின் நினைவூட்டலாக ஏற்றுக் கொள்ளும்படி அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
++++++++++++++++++++++++++++++
மனிதன் முத்தையா, சங்கானை வாசி, அனைவராலும் Man முத்தையா என்று அழைக்கப்பட்டவர் எழுதிய கவிதை, “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்” 25வது ஆண்டு நினைவாக பிரசுரிக்கப்பட்டது.

அனைவரையும் காத்தவனே!

பாமரர் மேல் உன் அன்பினைச் சொரிந்தாய்
படித்தவர்க்கெல்லாம் அறிவினைப் பகிர்ந்தாய்
மாணவர் தமக்கு வழிகாட்டி அகமகிழ்ந்தாய்
மாமகனே காத்தி ஏழைப் பங்காளா!

தூயவனே! உன் துடிப்பான தத்துவத்தை 
வேடிக்கையாகப் பேசிப் புரிய வைத்தாய்
ஞாலமெங்கும் செம்பதாகை – பரப்பி
சிறகடிக்க சிந்தை கொண்டு நின்றாய்

காத்தார், காத்தார் என்றே மக்கள் உமக்கு
காத்திரமாய் ஈந்தனரே அப் பெயரை
அனைவரையும் காத்தவனே – காத்தி காத்தி
உனையன்றி யாவர்க்குப் பொருந்தும் இப்பெயர்?

குலம் அக்காவின் இழப்பு

இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பெரிய பங்களிப்புச் செய்த குலமக்கா ( குருநகர், யாழ்ப்பாணம்.) குறித்த நினைவுகள் பலராலும் முகநூல் வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது.

இப் பூவுலகில் 84 வருடங்கள் வாழ்ந்த அவரது குடும்பம் மிதவாத தமிழ் அரசியல் பரப்பிலும், விடுதலைப் போராட்ட இயக்க அரசியல் பரப்பிலும் செய்த பணிகள் ஏராளம்.

இன்று அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது கட்சி வேறுபாடு இன்றி, இயக்க வேறுபாடு இன்றி வந்தவர்களைக் கண்டேன்.

தமிழ் தேசியப் போராட்டக் களத்தில் செல்விருந்தோம்பி,வருவிருந்து பார்த்திருந்த பண்பாளர் குடும்பம்.

அவரது கணவர் வேதநாயகம் எனது தந்தையாருடன் மிகுந்த நட்புறவு பாராட்டிப் பழகிய ஒருவர்.வேசமற்ற நேசம் அது.

குலமக்காவின் இறுதி நிகழ்வு 16.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் கடற்கரை வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்.

(வேதநாயகம் தபேந்திரன்)

அன்புநிறைந்ததாயாருக்குஆழ்ந்தஇரங்கல்கள்…

(இராமச்சந்திர மூர்த்தி.பா)

குலம் அக்கா ஜோசப்பின் வேதநாயகம் அவர்கள் 11.07.2019 அன்று யாழ்நகரில் மாரடைப்பால் காலமானார்
என்பதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்….

1960 மற்றும் 1970களில் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் களச்செயற்பாட்டாளராக விளங்கியவர். குலம் அக்காவினுடைய பிள்ளைகள் பாசத்திற்குரிய தங்கை கௌரி,நளினி ஆகியோர் உள்ளிட்ட அவருடைய பிள்ளைகள் அனைவருமே அவரைப்போல் போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர்கள்.

அதனால் அவருடைய குடும்பம் சிறை வாழ்க்கை ,சித்திரவதை என்று பல துன்ப துயரங்களைச் சந்தித்தது.
ஓருகாலத்தில் அவர்களினுடைய வீடு
போராட்டத் தலைவர்வர்களான பிரபாகரன், உமாமகேஸ்வரன், தோழர் பத்மநாபா போன்றவர்கள் பாதுகாப்பாக வந்து தங்கிப்போகுமிடமாகவும் இருந்தது.
புஸ்பராணி அவர்களின் “அகாலம்” நூலிலும் புஸ்பராஜா அவர்களின் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்னும் நூலிலும் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குலம் அக்காவின் குடும்பத்தின் பங்களிப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவர் வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சராய் இருந்த பாசத்திற்குரிய தோழர் வரதராஜப்பெருமாள் மற்றும் பாசத்திற்குரிய தோழர் மாவின் என அழைக்கப்படும் Roy tontan அவர்களின் மாமியாருமாவார்.

ஈழ மக்களின் அரசியல் பயணத்தில் பல தசாப்தங்களாக இணைந்து செயற்பட்டுவந்தவர் அன்புத் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் துயரில் நானும் எனது துணைவியார் எனது அன்பு பிள்ளைகள் ஆகியோரும் இணைந்து கொள்கிறோம்.

அன்புத் தாயாருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்…
தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
இந்த தாயாரின் கையால் நானும் உணவு உண்டிருக்கிறேன்…
அவ்வளவு பாசமுள்ள தாயாரின் இறுதி அஞ்சலி
அன்னாரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை 16 – 07 – 2019 அன்று காலை நடை பெறுகிறது.
இந்த இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை யே என்று மனம் வேதனைக் கொள்கிறது…

அன்புநிறைந்ததாயாரை இழந்து வாடும் அவரது குடும்பதினர்

அன்புத் தங்கைகள்
Gowry Perumal
Nalini Roy.

அன்புத் தோழர்கள்
Varathar Rajan Perumal
Roy Danton.

அன்பு மருமகள்கள்
Kannamma perumal.
Ragavadhini perumal.
Nelambari perumal.
Jennifar Niruthika Rai
Karthika Rai

ஆகிய அனைவருக்கும்…
மற்றும் தோழர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

என்றும் அன்புடன்….
இராமச்சந்திர மூர்த்தி.பா

குலம் அக்காவின் இறுதி நிகழ்வுகள்

எனது தாயாரின் இறுதிச் சடங்கு செவ்வாய் கிழமை (16-07-2019) அன்று காலை நடை பெறும். அன்று காலை 8.30க்கு 36 A கடற்கரை வீதி யாழ்ப்பாணம் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வும் அடுத்து காலை 10.00க்கு புனித மரியாள் (பெரிய) கோவிலில் இறை ஆசீர்வாத நிகழ்ச்சியும் பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் அடக்கமும் இடம்பெறும். இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 8

(யஹியா வாஸித்)
எப்போது உருப்படும் இந்த தேசம்,இனி என்ன செய்வதாய் உத்தேசம்
1983 ஜூலை. மொத்த ஸ்ரீலங்கா மக்களினதும் வாழ்க்கை,
வாழ்வாதாரம் அனைத்தையும் வெட்டி குழிதோண்டி
புதைத்த மாதம். அந்த நாள் எல்லா நாளையும்போல,
பொல பொல எண்டுதான் எங்களுக்கும் விடிஞ்சது,
ஆனா நேரம் போக போகத்தான் நாடி,நரம்பு, மூளை,
முண்ணான் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது.

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6.35 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரரணை தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

தமிழர்களின் பிரச்சினை தீர வேண்டுமென்பதில் கூட்டமைப்புக்கு அக்கறையே இல்லை: முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கடும் சாடல்

தமிழ்மக்களின் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவொரு உண்மையான அக்கறையுமில்லை. தமிழர்களின் பிரச்சினை தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் காணப்பட வேண்டுமென்பதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் கடுமையாக சாடியுள்ளார்.

மாற்று அரசியல் சக்திகளின் பலவீனம்.

(கருணாகரன்)
2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, எதிர்காலத்தில் தமிழ்த்தரப்பினுடைய அரசியலைக் கையாள்வதைப் பற்றிச் சிங்கள அரசியல் உயர் மட்டத்தில் பல விதமான உரையாடல்கள் நடந்தன. இதன்போது பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்தன. அதில் முக்கியமான ஒன்று, ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஈழவிடுதலை இயக்கங்களை எந்த வகையிலும் முதன்மைப்படுத்தக் கூடாது என்பது. அவை அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டாலும் சரி அல்லது சிங்களச் சமூகத்தோடு நெருங்கிச் செயற்படும் ஆர்வத்தை வெளிப்படுத்தினாலும் சரி, அவற்றை எந்தக் காரணம் கொண்டும் உள்ளே எடுக்கக் கூடாது என்றவாறாக.

34வது ஆண்டு நினைவில்…………

07.07.1986ம் ஆண்டு யாழ் மாவட்டத்தின் குருநகருக்கும் பாலைதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மக்கள் விடுதலைப் படையின் அன்றைய பிரதமதளபதியாகவிருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா நோக்கி EPRLF இன் உறுப்பினர்கள் பயனித்த படகு ஒன்று சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்ததில் 7 தோழர்கள் உயிரிழந்தனர் . அப்படகில் 15 பேரளவில் பயனித்திருந்தனர் .குருநகரைச் சேந்த தோழர் கெனடி அப்படகிற்கு ஓட்டியாக சென்றார். அவரினுடைய கடுமையான முயற்சியினூடாக தோழர் டக்ளஸ் தேவானந்தா கரைக்குகொண்டுவந்து சேர்க்கப்பட்டார்.
ஏனைய தோழர்களின் மீட்புப்பணியினை தோழர்கள் மேற்கொண்டபோது தோழர்களான செண்பகன் ,சுகிர்தன் ,அசோக் ,இமாம் ,எட்வேட் , ஞானம் ,நாகராசா ஆகிய ஏழு தோழர்களும்
மரணமடைந்திருந்தனர்.
அதில் தோழர் நாகராசாவின் சடலம் கிடைக்கவில்லை . ஏனையவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் . மூன்று நாட்களின்பின்பு மானிப்பாயிலுள்ள மயானத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் தோழர்களுக்கான அஞ்சலிகள் செலுத்தப்பட்டு இரானுவ மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன .

தோழர் செண்பகன் (அகிலன்)

உரும்பிரயினை பூர்வீகமாக கொண்டபோதும் இவர் கொழும்பில் வாழ்துவந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர் . இவருடைய கல்லூரியின் சமகால மாணவர்களும் தோழர்களுமான கபூர்,இப்ராகீம்.றொபின் போன்றவர்களுடன் 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து 1983 ம் ஆண்டின் இனக்கலவரம் வரை GUES என்னும் மாணவர் அமைப்பின் கொழும்பு மாவட்டத்தின் அமைப்புச் செயற்பாடுகளில் முக்கிய பங்கற்றியவர் .தோழர் கபூரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளில் முக்கியபங்ற்றியிருக்கின்றார்.குறிப்பாக தோழர் கபூர் தலைமையில் மாணவர் மத்தியில் முத்தமிழ் கலாமன்றம்என்ற மறைபெயரில்
இயங்கிய செயற்பாடுகளிலும் 1977ம் ஆண்டு கிழக்கு மாகானத்தில் ஏற்பட்ட சூறாவளிக்கு மேற்கொண்ட நிவாரணப்பணிகளையும் குறிப்பிடலாம். 1983ம் ஆண்டில் ஏற்பட்டஇனக்கலவரத்தில் கொழும்பில்
அவருடைய வீட்டிற்கு புகுந்த காடையர்கள் தந்தையாரையும் அண்ணனையும் படுகொலை செய்தனர்.எதிர்பாராதவிதமாக சம்பவதினத்தன்று தோழர் கபூருடன் நின்றிருந்ததால் அப்படுகொலையிலிருந்து தப்பியிருந்தார்.அவருடைய ஓரேஒரு சகோதரியுடன் உயிர்தப்பி யாழ் மண்ணை வந்தடைந்தார். இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இயங்கிய அகதிமுகாம்களில் தங்கியிருந்த மக்கள் மத்தியில் தோழர் கபூர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பணியாற்றியிருந்தார்.யாழ் மண்னிற்கு வந்து மரணிக்கும் வரைக்கும் செம்மண் பிரதேசத்திலுள்ள குறிப்பாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட கூலிவிவசாயிகள்,மாணவர்கள், இளைஞ்ஞர்கள் மத்தியில் அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.அவருடைய குடும்பம் இனக்கலவரத்தில் உயிர்களை, சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியபோதும் இவரிடம் குறுகிய இனவாதமோ அல்லது பழிவாங்கும் எண்ணமோ இருந்ததில்லை.சிங்கள மக்கள்மீதான நேச உறவும் ,ஈழ விடுதலையினூடாக முழு இலங்கைக்குமான புரட்சிக்கான விடுதலையில் தெளிவாகவிருந்தார்.

தோழர் சுகிர்தன் (பரமநாதன்)

கல்வியங்காட்டை பிறப்பிடமாக கொண்டவர் உயர்கல்வியை முடித்தபின்பு 1980 களின் ஆரம்பத்தில் 
ஜெர்மனியின் தலைநகரான பெர்லீனில் வாழ்ந்துவந்தார். ஜெர்மனியில் தோழர் ஜோர்ஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டஅரசியல் வேலைத்திட்டங்களில் இனைந்து பணியாற்றியவர்.கட்சியின் பிரச்சார வெளியீடுகள் மற்றும் நிதிசேகரிப்பு போன்ற விடயங்களில் முக்கிய பங்காற்றியவர்.1983ம் ஆண்டு ஏற்பட்ட
இனக்கலவரத்தினைத்தொடர்ந்து1984 ம் ஆண்டு பாலஸ்தீனவிடுதலை
இயக்கமொன்றின் பயற்சி முகாமில் பயிற்சிபெற்ற குழுவில் இவருமொருவராக இனைந்து பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி மரனிக்கும் வரைக்கும் பல்வேறு இரானுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்தக்கொண்டவர்.

தோழர் அசோக் (வில்பேட் மோகன்ரர்ஜ்)

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1983 ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இரானுவப் பயிற்சியை முடித்து தாயகம்திரும்பி பல்வேறு இரானுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டவர். குறிப்பாக இளவாலை இரானுவமுகாமுக்கு பொறுப்பாக இயங்கியதுடன் காரைநகர் கடற்படை முகாம்மீதான தாக்குகலுக்காக தோழர்களை தங்கவைத்து தயார்படுத்தியதிலும் முக்கிய
பங்காற்றினார்.

தோழர் இமாம் (கிருபானந்தம்)

தோழர் இமாம் சாவககச்சேரியைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தோழர் ரேபேட் அவர்களினூடாக கட்சிக்குள் இனைந்து கொண்டவர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டு வெளியில் வசித்து வந்தார். 1983 ஆண்டு
இனக்கலவரத்தினைத் தொடர்ந்து நேரடியாக போராட்டத்தில் இனைந்து கொண்டவர். இவரும் பாலஸ்தீனவிடுதலை இயக்கமொன்றின் போர்ப்பாசறையில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியபின் அவர் மரனிக்கும்வரை யாழ் மாவட்டத்தில் பணியாற்றினார்.

தோழர் எட்வேட் (ஈஸ்வரன்)

கோப்பாயைப் பிறப்பிடமாகக்கொண்டவர். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் உயர் கல்வி பயின்றபோது தோழர் இராஜ ன் அவர்களினால் 1980 களின் ஆரம்பத்தில் GUES என்னும் மாணவர் அமைப்பில் இனைத்துக்கொள்ளப்பட்டவர். அவர் இறக்கும்வரை யாழ் மாவட்டத்தில்
குறிப்பாக கோப்பாய் தொகுதியிலுள்ள உயர் கல்விபயிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் மத்தியிலும் அரசியல் பணியாற்றினார்.

தோழர் ஞானம் (திருச்செல்வம்)

கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1983 ன் இனக்கலவரத்தினைத் தொடர்ந்து கல்வியை இடைநிறுத்திவிட்டு போரட்டத்தில் இனைந்து கொண்டவர். இரானுவப்பயிற்சியை முடித்துக்கொண்ட பின்பு வடகிழக்கில்
செயற்பட்டவர்.குறிப்பாக பாதுகாப்பு பிரிவில் நீண்டகாலமாக பனியாற்றியவர்.

தோழர் நாகராசா (விமலேந்திரன்)

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1983ம் ஆண்டின் இனக்கலவரத்தினைத் தொடர்ந்து திருகோணமலையில் ஏற்பட்ட அசாதாரண
சுழ்நிலைகாரணமாக கல்வியைத் துறந்து போராட்டத்தில் இனைந்துகொண்டு
பின்நாளில் இரானுவப்பயிற்சியை முடித்து களத்தில் செயற்பட்டவர்.