அன்ரன் பாலசிங்கத்தின் உண்மை முகத்தை அறியாமல் அவரை அறம்மிக்க புத்திசீவி என்று தப்பாக கணிப்பவர் ஒரு வகை. மறுவகை பாலசிங்கத்தின் உண்மை முகமறிந்தும் அவரை வேண்டுமென்றே தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக நல்லவராக காட்டுபவர்கள். கருணாகரன் இந்த இரண்டாம் ரகம். அண்மையில் அவர் எதிரொலியில் எழுதிய கட்டுரையில் பாலசிங்கத்துக்கு புனர்வாழ்வளிக்க பகீரதப்பிரயத்தனம் செய்துள்ளார்.
தனிநாடு கோரி போரிட்ட ஒரு இனம் இன்று ஒரு நகரத்தின் அலகுகளை தரமுயர்த்தப்படல் வேண்டும் என்ற நிலைக்கு சென்று இருக்கின்றது, ஒரு காலத்தில் மாவட்டசபைகள் மட்டுமே அதிகாரமாக தர முடியும் என அப்போது தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த ஜேஆர் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு மாகாணமாக வழங்க முன்வந்தார் அதைவிட அந்த மாகாணத்தை நிர்வகிக்க இந்தியா முதல் கட்டமாக நூறு கோடிகளை வழங்க முன்வந்தது அதைவிட தமிழரின் பாதுகாப்புக்கு தமிழ்த்தேசிய இராணுவம் என்ற ஒன்றை அமைத்தது இந்த இரண்டு விடயங்களையும் முற்றாக புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதன் காரணமாக ஈபிஆர் எல் எப் வடக்கு கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டி ஏற்பட்டது, இதே காலத்தில் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் யுத்தம் ஆரம்பித்தது, இந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவுடன் புலிகளுக்கு ஏற்பட்ட நட்பும் அதைவிட இந்தியாவை எதிர்த்த பிரேமதாசாவின் கொள்கை பற்றுறுதியாகி பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வாரி வழங்கினார், புலிகளின் எதிர்ப்பும் அதைவிட இலங்கை அரசின் எதிர்ப்பும் இந்தியாவை முகம்சுழிக்க வைத்தது அதைவிட இந்திய இராணுவத்தின் இழப்பு இந்திய இராணுவம் வெளியேறியது அதே காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதர் அவர்கள் மாகாணசபையில் தமிழீழ பிரகடனம் செய்துவிட்டு வெளியேறினார், இது முடிந்த கதை, கிடைத்த வாய்ப்புகளை தட்டிக்கழித்துவிட்ட தமிழினம் இன்று முதலில் இருந்து ஆரம்பிக்கின்றது, வரலாறுகள் இப்படித்தான் மாறி மாறி வந்துபோகும் .
நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக் கூடாது. இதிலிருக்கின்ற முரண்பாடுகளைக் களைவதற்கும் எல்லை நிர்ணயத்தில் காணப்படும் சில சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அதனூடாக, நிதானமான முறையில், கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தைக் கையாள வேண்டுமென்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புகைப்பட சட்டம் வடிவில் டுபாயில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. உலக அளவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் நகரங்களில் ஒன்றாக டுபாய் விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு பிரம்மாண்ட திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் காலீபா மற்றும் உலகின் மிக உயரமான ஓட்டல் ஜேடபிள்யூ மேரியாட் என்று பிரம்மாண்ட கட்டடங்கள் மூலமாக உலகின் கவனத்தை துபாய் ஈர்த்து வருகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சிங்களவர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டால் எதிர்ப்பு; முஸ்லிம் ஒருவர் பதவிக்கு வந்தால் போராட்டம்; ஏன் தமிழர் ஒருவர் நியமனம் பெற்றுவிட்டாலும் அங்கேயும் மறைமுக நடவடிக்கைகளின் ஊடாக எதிர்ப்புணர்வு நகர்த்தப்படுகிறது. இவை, அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வுகள்தான்.
இன்று பத்மநாபாவின் நினைவு நாள்.19.6.1990 அன்று சென்னையில் வைத்து விடுதலைப்புலி களின் தளபதியான ஒற்றைக் கண் சிவராசனால் படுகொலை செய்யப்பட்ட ஈபிஎல்ஆர்எப் தலைவர் பற்றி ட்விட்டரில் மிக நீண்ட அளவிற்கு ஒரு பதிவை போட்டு இருந்தார்.படிக்க மிகவும் அற்புத மாக இருந்தது.
ஐக்கியதேசியகட்சி(UNP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல் கிழக்கு மாகாணத்தில் 1000புத்தர் சிலை நிறுவும் திட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் இணக்க அரசியல் நடாத்தும் தலைமைகள் கண்டும் காணமல் உறங்கிக்கிடக்கின்றனர்.
நவம்பர் 19 அமரர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் ,இவர் பிறந்தது நவம்பர் 19, இறந்தது ஜூன் 19. இவர் பிறந்த நாளை எண்ணும் போதெல்லாம் இவரது இறந்த நாட்களே கண்முன்னால் வந்து நிற்கின்றது, அவர் மதம் , மொழி , இனம் சார்பற்ற ஆட்சியையே நடத்தினார், இன்னும் சற்று விளக்கமாக கூறினால் அவரின் ஆட்சி முறை ஒரு திப்பு சுல்தானின் ஆட்சி முறைக்கு ஒப்பானதாகும். மக்களுக்காக பாடுபட்ட திப்பு சுல்தானை துரோகி என்று கூறியவர்களும் உண்டு பத்பநாபாவையும் துரோகி என்றவர்களும் இன்னும் உயிருடன் பிணமாக நடந்து திரிகிறார்கள்.