(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்களே ஜனநாயகத்தின் அளவுகோல்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் எவ்வகையான தெரிவுகளையெல்லாம் வழங்குகின்றது என்பதை, நாம் அடிக்கடி காண்கிறோம். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றதொரு முதுமொழியை நாம் துணைக்கழைக்கிறோம். மக்கள் தீர்ப்புகள் எல்லாம், மகேசன் தீர்ப்புகள் தானா என்பதை, எல்லோரையும் விட இலங்கையர்கள் நன்கறிவர். இப்போது, மகேசன் தீர்ப்பை, இந்திய மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதற்கான பலன்களை, வருங்காலத்தில் அவர்கள் அனுபவிப்பர்.
இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை
இந்திய என்.ஐ.ஏ குழு இன்று வந்தது
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான,என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இந்திய பொலிஸ் பிரதானி ஆலோக் மிதாலின் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் தொடர்பைக் கொண்டிருந்தமைத் தொடர்பில், விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
Pray_for_Nesamani; யார் இந்த நேசமணி?
கையை விரி்த்தார் புலனாய்வுத்துறைத் தலைவர்
தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் பதவியில் இருந்தாலும், தனக்குப் போதிய அதிகாரம் இல்லை என்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றை, பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்ததாகவும், அது குறித்து, கடிதம் மூலம் அறிவித்ததாகவும் கூறிய தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் சிரிர மெண்டிஸ், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் ஆராயப்படவில்லை என்றும் சாட்சியமளித்தார்.
ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும்
(காரை துர்க்கா)
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும்.
’தமிழர்களை கோர்த்துவிட வேண்டாம்’
The Frozen Fire – உறைந்த நெருப்பு
1971 புரட்சியின் காரணமாக , அன்றைய சிறிமாவின் ஆட்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் ரோஹண விஜேவீரவும் , அவர் தம் சக தோழர்களும் 1977 இல் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென சிறையிலிருந்து விடுவிக்கப்படும் காட்சியுடன் இப்படம் தொடங்குகிறது. 1989 இல் தலைமறைவாக இருந்த நிலையில் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படும் காலம் வரையான கிட்டத்தட்ட 13 வருட ஜேவிபி தலைமையினதும் , அது நடாத்திய அரசியலினதும் வரலாற்றை பதிவு செய்வதே இப்படத்தின் நோக்கம் எனலாம்.
வைத்தியர் ஷாபிக்கு எதிராக குருநாகலில் ஆர்ப்பாட்டம்
தந்திரோபாய அரசியலும் தப்பித்தலும்
(கருணாகரன்)
வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலே தாக்குதல் நடந்தாலும் வடக்குக் கிழக்கில்தான் பாதுகாப்புப் பலப்படுத்தப்படுகிறது. சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் நிச்சயமாக அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் உளவியல் சார்ந்த காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம். அந்த உளவியல் தமிழர்களை இன்னும் சந்தேகித்தல் மற்றும் தமிழ்ப்பகுதிகளில் படைகளின் இறுக்கத்தைத் தொடர்ந்தும் பேணுதல். இது உண்மையென்றால் இது ஒரு நோய்க்கோளாறே.