தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 89 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 69 பேர் குற்ற விசாரணைப் பிரிவாலும் 20 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றுவந்த வர்த்தக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து அரிசி மற்றும் ஆடை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், வணிக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பபாலி தெரிவித்துள்ளார்.

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்!


-ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம்-

எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இடையிடை மின்னிய நோய்களும் எப்போதும் எரிந்து கொண்டிருந்த மனோவியாதிகளும் இன்று வெப்பமும் பெரும் வெளிச்சமுமாய்க் கப்றுக்குத் தெளிவான வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த மாயமும் பாவமும் சூழ்ந்த உலகைவிட்டும் மறைந்து மண்ணறைக்குள் உயிர்த்தெழலென்பது சத்தியமெனினும் அங்கான நமது சொர்க்க வாழ்க்கை சாத்தியமா என்பது ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி… இந்தச் சுயபச்சாதாப புலம்பல்களுக்குத் தற்காலிகத் தடைவிதித்துவிட்டு விடயத்துக்கு வருகிறேன்.

ஒரு தூரநோக்கு இல்லாத எமது நாட்டின் அரசியல் நிலைமை

இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு புறமிருக்க, படித்த பிரிவினருக்கு மத்தியிலும் கூட இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் விளைவாக முதன்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அற்பமான பிரச்சினைகளைச் சூழ சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் நாமம் ….

(Parathan Navaratnam)

சற்று முன் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து,
முடியுமா அண்ணை ?என்று கேட்டார் .
என்ன முடியுமா? என்று கேட்டதிற்கு ,

இலங்கையில் முள்ளிவாய்காலில் இருந்து கனடா பிரதமர் வரை இப்படி ஒரு அதிர்வலையை வேறு எந்த தலைவராலும் ஏற்படுத்தியிருக்க முடியுமா ?

நிட்சயமாக ஒருக்காலும் இல்லை என்று சொன்னேன் .

முள்ளிவாய்க்கால்……


(நான் அனுபவித்த சில விடயங்கள், நேரம் இருந்தால் முழுமையாக வாசியுங்கள்)

இதை கடந்து வந்து இன்னும் இரண்டு நாட்களோடு பத்து வருடங்கள் முடிய போகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் நான் அவ்வப்போது போய் முள்ளிவாய்க்கால பாத்து அழுதிற்று வந்திருக்கிறன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் நடந்த ஒரு நிகழ்விற்கு கூட போகவில்லை, இனியும் போக போறது இல்லை.

முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னான பத்து வருடங்கள்

உலகமே சாட்சியாக நிற்க ஒரு சிறு நிலப்பரப்பில் கொத்துக்கொத்தாக எமது மக்கள் அழிக்கப்பட்ட காட்சிகளும் பேரவலக்குரல்களும் பத்து வருடங்களின் பின்பும் எமது மனங்களில் அறைந்தபடியும் காதுகளில் ஒலித்தபடியும் இருக்கிறன. எத்தகைய ஒரு பேரவலம்! சிங்கள தேசத்தின் மனசாட்சி இனவாதத்தால் மறைக்கப்பட்டிருக்க, முஸ்லிம் மக்கள் மெளனித்திருக்க பெளத்த-சிங்கள பேரினவாத அரசு உலக ஆதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இனஅழிப்பின் கொடூர வடிவமெடுத்திருந்த காலம்.​

யாழில் இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் இந்தியர்கள் இருவரை, விசேட அதிரடிப் படையினர், இன்றுக் காலை (17) கைதுசெய்துள்ளனர். இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சுற்றுலா விசாவில் வருகை தந்து, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலை செய்யும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள் முதல் விசேட தேடுதல் வேட்டை

சட்டவிரோதமான முறையில், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுத, உபகரணங்களைத் தம்வசம் வைத்திருக்கும் நபர்களைத் தேடி, திங்கட்கிழமை (20) முதல், நாடு முழுவதிலும், விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

‘ஐ.எஸ்-இலிருந்து மூவர் அனுப்பிய பணத்தை, படுக்கையறையில் பத்திரமாய் வைத்தேன்’

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.