5 புதிய ஆளுநர்கள் நியமனம்

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு

1. மேல் மாகாணம் – அசாத் சாலி
2. மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’

சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்வானிலிருந்து ஸி ஜின்பிங்கின் கருத்துகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சீனாவில் காணப்படாத ஜனநாயக சுதந்திரங்களை விட்டுக்கொடுக்க தாய்வான் மக்கள் எப்போதும் தயாரில்லை என தாய்வான் ஜனாதிபதி சை இங்-வென் கூறியுள்ளார். (“‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. (“வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை

ஆந்திரா.
அனந்த்பூர் மாவட்டம் .
கம்பதுரு மண்டல் பகுதி.
ராம்புரம் கிராமத்தைச் சார்ந்த
மல்லப்பா ஒரு விவசாயி.

பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார். (“விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை” தொடர்ந்து வாசிக்க…)

”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?

(எம்.குமரேசன்)
கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘திய்ய’ என்கிற சாதியைச் சேர்ந்தவர். திய்ய சாதியைச் சேர்ந்தவர்கள் தென்னை, பனை மரம் ஏறுவது, கள் இறக்குவதை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். பினராயி விஜயனின் தந்தையும் கள் இறக்கும் தொழிலாளிதான். குடும்ப வறுமை காரணமாக, விஜயன் சிறு வயதில் பீடி சுற்றும் வேலைபார்த்துள்ளார் .சிறு வயதில் கள்ளும் பீடியும்தான் தனக்கு சோறு போட்டதாக சொல்லிக்கொள்வார் பினராயி விஜயன். மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி, தற்போது கேரள முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். (“”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவ முன்வருவோம்!!!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எமது பகுதி மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்… எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் முடியுமான அளவு பொருட்களை சேகரித்து வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று கையளிக்க சமூகத்தில் அக்கறையுள்ள இளைஞர்கள் ஊடாகவும், சமூக ஆர்வலர்கள் ஊடாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். ஆகவே தங்களால் முடிந்த உதவிகளை வெளிநாடுகளில் வசிக்கும் எமது நண்பர்கள், இப்பகுதி தனவந்தகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆலய பரிபாலன சபையினர்கள் கைகோர்த்து உங்களால் முடிந்த பணத்தினையோ, பொருட்களையோ தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.. நீங்கள் தரும் உதவித்தொகைக்கு கொள்வனவு செய்யப்படும் பற்றுச்சீட்டுக்கள் அடங்கிய கணக்கறிக்கைகள் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன் எங்கள் சேவை ஒரு வெளிப்படை மிக்கதாகவும், எந்தவித உள்நோக்கமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் கரங்களுக்கு செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.. தொடர்புகளுக்கு – 0777389113 Please முடியுமானவரை செயார் செய்து ஏனைவர்களுக்கும் தெரியப்படுத்தவும்..

2019….. புத்தாண்டு தினத்தில்…..

பெண்களின்
உரிமைக்கு எதிரான தாக்குதலுக்கெதிராக
கேரள பெண்கள் சமூகம்
சாதி மதம் பாராமல் திரண் (“2019….. புத்தாண்டு தினத்தில்…..” தொடர்ந்து வாசிக்க…)

நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்

கிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும். இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன். (“நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

இயக்குநர் ம்ருணாள் சென் மரணமடைந்துவிட்டார்.

2018.
ஆண்டின் கடைசி நாள்.

புத்தாண்டைப் பார்க்க விரும்பவில்லை அவர்.

எல்லா நேரிய கலைஞர்களையும்போலவே-
குமைந்த மனோநிலையில்
இருந்திருக்கக்கூடும் .

இல்லாமலிருந்திருந்தால்தான் வியப்பு.

இடதுசாரிச் சிந்தனைகளைத் திரையில் கோர்த்த இயக்குநர் ம்ருணாள் சென்
நேற்று மரணமடைந்துவிட்டார்.

தரமான இந்திய சினமா என்றாலே
சத்யஜித் ரே, ம்ருணாள்சென் என்று
எவர் வாயும் முணுமுணுக்கும் வரலாற்றை நிறுவியவர்களுள் ரெண்டாமவரும் விடைபெற்றுச் சென்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி
மேற்கு வங்க சமூகத்திலும், அரசியலிலும்
மார்க்சியத் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன்…

உலக சினமாவின் ஓர் இந்திய முகம்…

வங்காளம்,ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா மொழிகளில் ஏறக்குறைய 30 திரைப்படங்கள்…

மேலும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்…

சிறந்த திரைக்கதை – சிறந்த படம் – சிறந்த இயக்கம் என
18 தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள்….

தாதாசாகேப் பால்கே,பத்மபூஷண்,
சோவியத்நாட்டின் நேரு சோவியத் விருதுகளுடன்…….

பிலிம்பேர் விருதுகள்….
1975 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1979 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1977 கர்லோவை வரை திரை விழா சிறப்பு விருது…
1979 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் – Grand Jury விருது…
1983 கேன்ஸ் திரைப்பட விழா விருது…
1983 வல்லாடோலிட் Gold spike விருது…
1984 சிகாகோ திரைப்பட விழா விருது…
1984 மான்ட்ரியல் திரைப்பட விழா விருது…
1989 வெனிஸ் திரைப்பட விழா விருது…
2002 கெய்ரோ திரைப்பட விழா விருது…

– என்று பெருமைகள் சூழ்ந்த பெருமகன்.

2002இல் வெளியான அவரது
கடைசித் திரைப்படத்துக்கு
இப்படிப் பேர் வைத்தார் :

‘இது என் பூமி’.

அது நிலைபெறும். ஆமாம்.

வருத்தமுடன் அல்ல.
வாழ்த்தி வழியனுப்புகிறோம்
தோழர் ம்ருணாள்.

(Rathan Chandrasekar)

இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?

(எம். காசிநாதன்)

புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். (“இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?” தொடர்ந்து வாசிக்க…)