(சாகரன்)
100 வருடத்தில் ஒரு தடவை நடைபெற்ற மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் என்று பலராலும் சொல்லம்படும் கேரளா வெள்ள அனர்த்தம் 1 சத விகித (நூற்றிற்கு ஒன்று) வாய்பை கொண்டிருந்தைமையினால் கேரள அரசோ அல்லது இந்திய மத்திய அரசோ இதற்கான முன் எச்சரிக்கைத் தயாரிப்புகளில் அதிகம் ஈடுபட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 2017 அமெரிக்காவின் கியூஸ்ரன் நகரில் இல் நிகழ்ந்த வெள்ள அனர்த்தங்களை ஒத்ததாக இது இருந்தது. வழமையான கேரளா மழைக்கால மழையை விட 47 வீதம் அதிகமாகவே இந்த மழை வெள்ளம் ஏற்பட்டது. பூமியின் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ்னால் அதிகரிக்கும் போது வெறும் 10 வீத மழை அதிகரிப்பை எதிர்பார்க்கும் சூழலியல் விஞ்ஞானிகள் இந்த 47 வீத அதிகரித்த மழை வீழ்ச்சியும் 100 வருடத்தில் ஒரு முறை நடைபெற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பார்க்கவும் இல்லை. சிறப்பாக பொது மக்கள் இந்த மழையால் ஏற்படப் போகும் அனர்த்தங்களை தமது வாழ்வின் 100 வருடங்களில் யாரும் கண்டிருக்மாட்டார்கள் அதாவது தமது ஆயுளில் எந்தக்காலத்திலும் கண்டிருக்க மாட்டார்கள். இதுவே மக்கள் இந்த நீரை வெறுக்கும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு காரணம்.
(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)