நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 4)

(சாகரன்)

100 வருடத்தில் ஒரு தடவை நடைபெற்ற மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் என்று பலராலும் சொல்லம்படும் கேரளா வெள்ள அனர்த்தம் 1 சத விகித (நூற்றிற்கு ஒன்று) வாய்பை கொண்டிருந்தைமையினால் கேரள அரசோ அல்லது இந்திய மத்திய அரசோ இதற்கான முன் எச்சரிக்கைத் தயாரிப்புகளில் அதிகம் ஈடுபட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 2017 அமெரிக்காவின் கியூஸ்ரன் நகரில் இல் நிகழ்ந்த வெள்ள அனர்த்தங்களை ஒத்ததாக இது இருந்தது. வழமையான கேரளா மழைக்கால மழையை விட 47 வீதம் அதிகமாகவே இந்த மழை வெள்ளம் ஏற்பட்டது. பூமியின் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ்னால் அதிகரிக்கும் போது வெறும் 10 வீத மழை அதிகரிப்பை எதிர்பார்க்கும் சூழலியல் விஞ்ஞானிகள் இந்த 47 வீத அதிகரித்த மழை வீழ்ச்சியும் 100 வருடத்தில் ஒரு முறை நடைபெற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பார்க்கவும் இல்லை. சிறப்பாக பொது மக்கள் இந்த மழையால் ஏற்படப் போகும் அனர்த்தங்களை தமது வாழ்வின் 100 வருடங்களில் யாரும் கண்டிருக்மாட்டார்கள் அதாவது தமது ஆயுளில் எந்தக்காலத்திலும் கண்டிருக்க மாட்டார்கள். இதுவே மக்கள் இந்த நீரை வெறுக்கும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு காரணம்.

(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part5)

மதங்களில்……. இது சம்மந்தமான சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவனாக நான் இருந்தாலும் வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்புக்கள் கிடைக்கும் போது அத் தலங்களுக்குரிய ஒழுக்க நெறிமுறைகளை நான் மிகவும் ‘பவ்வியமாக’ பின்பற்றுபவன். இதற்கு சில காரணங்கள் உண்டு. எமது மக்களின் வாழ்வுடன் இந்த வழிபாட்டுத்தலங்கள் ஒரு கலாச்சார இணைப்பாக இணைந்திருப்பதுவும் பலரின் தூய்மையான நம்பிக்கைகளை மதிப்பவன் என்ற காரணத்திலானாலும் ஆகும். இந்த வகையில் இந்து ஆலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் மேல் அங்கியை கழட்டி விட்டு நான் ஆலயங்களுக்குள் நுளைவேன். இதனையே நயினாதீவு ஆலயத்தினுள் செல்லும் போது பின்பற்றி ஒரு ஓரமாக பவ்வியமாக நின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part5)” தொடர்ந்து வாசிக்க…)

குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். (“குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் சேவையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்

நேற்றையதினம் 07/09/2018 வெள்ளிக்கிழமை, ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலத்தில் பொதுமக்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேசசபை ஊழியர்களுடன் இணைந்து சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிரமதானப்பணியின் போது அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை மேடு பள்ளமாக காணப்பட்ட ஆத்திமோட்டை 7ம் வீதி குறுக்குஒழுங்கையில் கொட்டப்பட்டு நண்பர்களுடன் இணைந்து நிரவப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போராட்டம் ஒன்றே வாழ்வை நிர்ணயிக்கும்

(ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி)
“நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி ஆனால் இந்த நவீன உலகில் எமது நிலங்களை நீரற்ற தரிசு நிலங்களாக ஆக்குவதையே நோக்காக கொண்டு மனிதன் செயல்பட்டு வருகின்றான். தற்போது புல்லுமலையில் மினரல் வாட்டர் கம்பெனி ஒன்று உருவாகி வருகின்றது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கின்ற குரல்கள் வெளிவருகின்றன. எமது நீர்வளத்தை உறிஞ்சி எமக்கே விற்பனை செய்கின்ற இந்த வியாபாரிகளை நிச்சயம் நமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். எங்கோ இருந்து வரும் காப்ரேட் முதலாளிகளின் பணப்பையை நிரப்பிக்கொண்டு எமது நிலங்களை வறண்ட பூமியாக்கும் திட்டங்களை நம் ஒரு அனுமதிக்க கூடாது.

(“போராட்டம் ஒன்றே வாழ்வை நிர்ணயிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part4)

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part4)” தொடர்ந்து வாசிக்க…)

நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 3)

(சாகரன்)

இது வெறும் கேரளாவிற்கான பிரச்சனை அல்ல. ஒவ்வொரு மனிதனும் சிறிது காலம் வாழ்ந்து விட்டு மறைந்து போகும் இந்த பூமிப் பந்து மட்டும் நிலையானது. எமக்கு பின்பு அடுத்த சந்ததி உயிரினங்கள் இங்கு பிறந்து வாழக் காத்திருக்கின்றன. அதுதான் நாம் கூறும் எமது பரம்பரை வாழ்வதற்காக இந்த பூமி காத்திருக்கின்றது. இவர்களின் நியாயமான வாழ்விற்கு இந்த பூமிப் பந்தின் இயல்பான இருக்கை அவசியமாகின்றது. கொந்தளிப்புகளும், குமுறல்களும், எரிமலைகளும், சமுத்திரம், காற்றின் சீற்றங்களும், கொழுத்தும் வெப்பமும் ஏற்புடையன அல்ல.

(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனின் விலகல் உறுதி

(கே. சஞ்சயன்)

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது. ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார்.

(“விக்னேஸ்வரனின் விலகல் உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மட்டக்களப்பு, புல்லுமலை தண்ணீர் போத்தலிடும் தொழிற்சாலைக்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை (07) நடைபெறுவுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள் பல பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர். குறித்த ஹர்த்தாலுக்கான அழைப்பு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால் விடுக்கப்பட்டிருந்தனர். (“தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

7 பேரை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வருகின்றன பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கான அதிகாரம் தமிழக அரசிற்கு உள்ளனதென, உச்ச நீதிமன்றம் ​அறிவித்துள்ளது.