புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)” தொடர்ந்து வாசிக்க…)

அடையாள அட்டை கட்டணம் உயர்வு

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த்திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“அடையாள அட்டை கட்டணம் உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் படுகுழிக்குள் விழலாமா?

(கே. சஞ்சயன்)

இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி – பதில் வடிவிலான அறிக்கை ஆகும்.

(“மீண்டும் படுகுழிக்குள் விழலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

‘பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும்?’ – பொது வேலைத்திற்கான கலந்துரையாடல்

இடம்: சமூக நலனுக்கான நிறுவனம் (CSC) இல. 30,
                         புகையிரத நிலைய வீதி, ஹட்டன்
திகதி:         2018/09/01
நேரம்:         மு.ப. 10 மணி முதல் பி.ப. 2 மணிவரை
மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வு பற்றி தங்களின் மேலான ஊடகத்தில் செய்தியை பிரசுரித்தமைக்கு முதலில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட பெருந்தோட்ட முறையின் இருப்பு பற்றிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ள இந் நிகழ்விற்கு தங்களின் மேலான ஊடகத்தின் சார்பில் ஊடகவியலாளர்களை கலந்துகொள்ள ஏற்பாடு செய்து குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
சட்டத்தரணி இ. தம்பையா
பொதுச் செயலாளர்
தொடர்புகளுக்கு: 071-4302909/071-6275459

‘மெல்ல’ வரும் கபளீகரம்

(Menaka Mookandi)

நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதி​ர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களைக் காணலாம். இவ்விரு உலகங்களுக்கும் இடையிலான இடைவெளியை, எவராலும் அடைக்க முடியாதளவுக்குப் பரந்து காணப்படுகிறது.

(“‘மெல்ல’ வரும் கபளீகரம்” தொடர்ந்து வாசிக்க…)

புத்திசாலியான பிரான்ஸ் காகம்

(Amirthapriya)

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நாம் நடமாடித் திரியும் சுற்றாடலின் தூய்மையைச் சரிவரப் பேணும்போது தான், நம்முடைய உடல் மற்றும் உள தூய்மைகளும் சீராகப் பேணப்படுமென்பதே நிதர்சனமாகும்.

(“புத்திசாலியான பிரான்ஸ் காகம்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதலமைச்சர்: உள்ளூர் தீர்மானிக்கும் வியடமல்ல

(க. அகரன்)

உலக அரங்கில், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதன் தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அதன் அரசியல் நிலைப்பாடுகள், உள்ளூரில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்ற கருத்தியல் பரவலாகவே உள்ளது. ஏனெனில், அதன் இயங்கு நிலை தொடர்பிலும் அதன் ஸ்திரத்தின் பெறுமதி தொடர்பிலும், அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகளின் அல்லது அயலில் உள்ள பலம் பொருந்திய நாடுகளின் கைகளிலேயே உள்ளது என்பதே உண்மை.

(“வடக்கு முதலமைச்சர்: உள்ளூர் தீர்மானிக்கும் வியடமல்ல” தொடர்ந்து வாசிக்க…)

பேராசிரியர் ஹஸ்புல்லா

பேராசிரியர் ஹஸ்புல்லா இலங்கையில் சமூகங்களிடையே நல்லுறவு “எல்லாரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு” என வழ்ந்தவர். மெல்லிதயம் கொண்ட மனிதர். வன்மம் பகை உணர்வுகளுக்கு இடமளியாமல் வடக்கு முஸ்லீம்களின் பாடுகளை தொடர்ச்சியாக வெளிபடுத்திவந்ததோடல்லாமல் அவர்களுக்கு கண்ணியமான இருப்பை ஏற்படுத்த பாடுபட்டவர். வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்காகவும் சமூகங்களிடையே புரிதலுக்காகவும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர்.

(“பேராசிரியர் ஹஸ்புல்லா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 04)

(Thiruchchelvam Kathiravelippillai)

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எண்பதுகளின் முன்னர் குறிப்பாக 1984 ஆம் ஆண்டின் முன்னர் மிகவும் அன்னியோன்னிய உறவுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்களின் திருமண வீடுகளில் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்வதும் முஸ்லிம் மக்களின் திருமண வீடுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்வதும சாதாரண விடயங்கள். அனேகமான நல்லது கெட்டதான நிகழ்வுகள் இரு சமூக மக்களும் கலந்தே நடத்தினர். பிட்டும் தேங்காய்ப் பூவும் போல என எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டன.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 04)” தொடர்ந்து வாசிக்க…)

நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்……

7 நாட்களாக முகநூலுக்குள் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக சூரியன் உதிக்காமலுமில்லை. ஆனாலும் கடந்த 25ம் திகதி பகல் 10 மணியளவில் நண்பர் சிராஜ்மஸூர் சொன்ன செய்தியும் நண்பர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தொலைபேசியில் அழைத்த நிகழ்வும் என்னைக்கலங்கவைத்து…

(“நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்……” தொடர்ந்து வாசிக்க…)