எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?

கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும்.

(“எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்

(கருணாகரன்)

07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நிvediன்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது.

(“மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது

அண்மையில் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் குடியேறிய சிங்கள மக்களுக்கு எதிராக சட்டத்தரணி கேசவன் சயந்தன்( மாகாணசபை உறுப்பினர்) வழக்கு தொடுத்ததாக செய்திகளில் படித்தேன். இந்த வழக்கு சட்டரீதியாக சரியாக இருக்கலாம்.இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களுமே. அவர்கள் அதை செய்யாதது தவறு.

(“சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது” தொடர்ந்து வாசிக்க…)

பேட்டைக்காரன் கலைஞர்.

(தமிழ்ப் பிரபா)

கலைஞரைப் பற்றி இங்கே எழுதக்கூடிய நிதானமான மனச்சூழல் இப்போதுதான் கிடைத்தது. கலைஞர் செய்த முக்கியமானதொரு காரியமாக என்னளவில் நினைப்பது, ‘மெட்ராஸ்’ கூவத்தை ஒட்டி வாழ்ந்த குடிசைப்பகுதி மக்களுக்கு ஹவுசிங் போர்டு கட்டிக் கொடுத்தது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் ‘குடிசை மாற்று வாரியம்’ என்று அவர் தொடங்கிய ஹவுசிங்போர்டு திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய உளவியல் பலத்தை சேர்த்தது. கலாசார மாற்றத்தைக் கொண்டுவந்தது. தங்களிடையே இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்திய கலைஞரையும் மக்கள் இன்றளவும் விட்டுக் கொடுத்ததில்லை.

(“பேட்டைக்காரன் கலைஞர்.” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்

இந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக்கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

(“கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்” தொடர்ந்து வாசிக்க…)

தேசத்துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் இடம்பெற்ற, ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பேசிவிட்டு இன்று அதிகாலை நோர்வேயிலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் வசனங்கள்…….

“பாலைவன ரோஜாக்கள்” என்றொரு திரைப்படம் 1986 இல் வெளியாகியிருந்தது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் சாயலாக மணிவண்ணன் தமிழில் எடுத்த படம். அரசியல் எள்ளல் (political satire) நிறைந்த திரைப்படம். அரசியலில் உள்ள சகல கறுப்பு பக்கங்களையும் அம்பலப்படுத்துகின்ற துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். (“கருணாநிதியின் வசனங்கள்…….” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……..(Part 2)

எனது பயண அனுபவங்களில் முதல் பகுதியை வெளியிட்டு இருந்தேன். முதலில் இதற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இது என்னை செழுமைப்படுத்த உதவியது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இது தொடங்கி வைத்திருக்கின்றது என்பதில் எனக்கு மகிழ்சியே. (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……..(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

என் கண்ணில் நீர் கசிவை தராத கலைஞர் மறைவு!.

பன்முகத்தன்மை கொண்ட ஒரு முதியவர் தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். தமிழ்நாட்டின் ஐம்பது வருடத்துக்கு மேலான ஆழுமை அமரராகிவிட்டார். ஒரு வரலாற்று நாயகன் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். பள்ளிபருவத்திலேயே கையெழுத்து பிரதியாக தன் எழுத்து பணியை தொடங்கி நாடக கலைஞனாக பரிணமித்து திரையுலக ஜாம்பவானாக உச்சம் தொட்ட மனிதர் மௌனித்து விட்டார்.

(“என் கண்ணில் நீர் கசிவை தராத கலைஞர் மறைவு!.” தொடர்ந்து வாசிக்க…)