கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும்.
(“எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?” தொடர்ந்து வாசிக்க…)