(வருடம் ஒன்றிற்கு மேல் எழுத ஆரம்பித்த எனது பயண அனுபவங்கள் பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக தொடர முடியவில்லை… தற்போது அத்தியாயங்கள் பலவற்றை கடந்து இடை அத்தியாயம் ஒன்றில் தொடர்கின்றேன்)
மன்னார், தலைமன்னார் பயணங்கள்…
வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக மன்னார் அல்லது மதவாச்சி செட்டிகுளம் ஊடான பயணம் என்பது வீதிகளின் தரங்களின் அடிப்படையில் எனது பயணம் இரண்டாவது தெரிவாக அமைந்தது. 1980 களின் நடுப்பகுதி வரையிலான எனது கடைசி அனுபங்களே இந்தப் பிரதேசங்கள் பற்றி நேரடி அனுபவங்களாக இருந்தன. வயலும் அதனைச்சார்ந்த தொழில்களும் வற்றாத ஆறும்(மல்வத்து ஓயா) கட்டுரைக் கரைக் குளம் என்று இன்றுவரை வற்றாத இரணைமடுவிற்கு அடுத்து பெரிய குளமும் அமைந்த பிரதேசங்களை ஊடறுத்த பயணமாக அமைந்தது. மகிந்த காலத்து நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை என்பது செட்டிகுளப்பாதையின் தரத்தை மன்னார் வீதியைவிட சிறந்ததாக உணர முடிந்தது. திரும்பி வரும் போது மன்னார் வீதியை பாவித்ததினால் இதனை உணர முடிந்தது. 80 களில் ஓலையிலான வேய்த கடைகளையும் மரக்குற்றிகளினால் ஆனா பிரதான வீதியில் அமைந்த சந்தி தேநீர் கடைகள் இன்று கொங்கிறீர் இனால் ஆன தகரக் கொட்டடைகைகளாக காட்சியளித்தன. ஆனால் மக்களின் வாழ்கைத் தரத்தில் வாழ்கைமுறையில் அதிக மாற்றத்தை யுத்தம் முடிந்து இந்த 8 வருடங்களிலும் காண முடியவில்லை சிறப்பாக குடிசனப் பரம்பல் மிகவும் ஐதாக இருந்தது.செட்டிகுளப்பாதையில் ஒரே புகையிரதத்தை மூன்று வேறுவேறு கடவைகளில் கடந்த அனுபவம் புகையிரத்தின் வேகத்தையும் எமது பயணப்பாதையின் தரத்தையும் அளவீடு செய்வதற்கு ஏதுவாக இருந்தது. பழம் பெரும் கிராமமாக இருந்த செட்டிகுளம் 1970 களில் இருந்த வளர்சிநிலையிலேயே இருக்க காணப்பட்டது. (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)