கனேடியத்தமிழ்நாடோடிக்கதை

(மே 22 மணிவிழாக்காணும் சேரன் ஒரு நாடோடிக்கதையின் கதாநாயகனும். புலிப்பாசிச சேவைகளுக்காக சேரன் மாமனிதர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்)

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி ” யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை “இஞ்சேருங்கோ’ விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே ” என்று ஆலோசனை சொன்னா.

(“கனேடியத்தமிழ்நாடோடிக்கதை” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!

இன்றிரவு நடக்கவிருக்கும் போலீசு தாக்குதலை தடுத்து நிறுத்த குரல் கொடுப்போம்!

– பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 என்பது கடைசியாக கிடைத்த தகவல். 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் குண்டடி பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில்தான் நடைபெற்றது என்பது உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
திரேஸ்புரம் பகுதிக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும்போது, அவருக்கு காவல் வந்த படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பெண்கள் ஓர் ஆண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். (“முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடியில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி

இந்திய தமிழகத்தில் தூத்துக்குடியில் அகிம்சைவழியில் போராடிய தமிழ்மக்களை சுட்டு கொன்றதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கையில் திருகோணமலை மலையருவி முன் ஒன்று கூடிய போது

மே 19. தலைவர் பிரபாகரனின் உடல்……..?

இன்று மே 19. தலைவர் பிரபாகரனின் உடல் இன்றுதான் சிறிலங்கா மற்றும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்பட்டது. சிதைக்கப்பட்டிருந்த தலையின் மேற்பகுதி துண்டு போட்டு மூடப்பட்டிருந்தது. அளவற்ற புலிச் சீருடை ஒன்று அணிவிக்கப்பட்டிருந்தது. தெளிவற்ற கமெரா (அனேகமாக கைத்தொலைபேசி) ஒன்றின் ஊடாக அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது.

(“மே 19. தலைவர் பிரபாகரனின் உடல்……..?” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கல் நினைவேந்தலும் விக்கி ஐயா கையேந்தலும்

இன்றுவரை வடமாகாண முதலமைச்சராகிய பிற்பாடு, பல நாடுகளுக்கு செல்லும் அனுபவங்களையும் விக்கினேஸ்வரன் அவர்கள் (விக்கி ஐயா) பெற்று வந்துள்ளார். ஆனால் ஒரு நினைவேந்தலிலே யார் பங்கேற்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவராக உள்ளவரா விக்கி ஐயா? கனடாவில் இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டு உயிரிழந்தவரைக் கனம் பண்ண, முன்னாள் போராளிகளை Veterans எனக் கூறி, அவர்களுக்கு முன்னிடம் அளித்துத்தான் ஆண்டுதோறும் நினைவேந்தல் நடைபெறுகிறது. இது அவர்களுக்கு அளிக்கும் ஆறுதல்.

(“முள்ளிவாய்க்கல் நினைவேந்தலும் விக்கி ஐயா கையேந்தலும்” தொடர்ந்து வாசிக்க…)

விவாதம்

(Karunakaran Sivarasa)
சிவசக்தி ஆனந்தனுக்கு மட்டுமல்ல கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்களுக்கும் உண்மை நிலைமை புரியும். கூட்டமைப்பின் தலைமையைப் பற்றி – சம்மந்தனின் தலைமைத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி எல்லாம் எல்லோரும் அறிவர்.

(“விவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டை

தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு -1 மார்ச்சு 31, 2018க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் ஏப்ரல் 9, 2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இந்த முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் கூறியுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. (“தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டை” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் போராட்டங்களை

(நடிகர் சூர்யா கட்டுரையிலிருந்து)

மக்கள் போராட்டங்களை  ‘பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை’ என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள்
புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால்
பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்?

(“மக்கள் போராட்டங்களை” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடி போராட்டம் இப்படியொரு கொதிநிலையை அடையும்

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தமிழர்களுக்காக பெரும் எண்ணிக்கையில் தீயில் வெந்து இறந்த பின்னர், தமிழக மக்கள் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்கு எதிரான தமது போர்க்குணத்தை காண்பித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான தங்களது ஓர்மம் சமரசம் செய்ய முடியாதது என்பதை மீண்டுமொரு தடவை களத்தில் வந்து நின்று நிரூபித்திருக்கிறார்கள்.

(“தூத்துக்குடி போராட்டம் இப்படியொரு கொதிநிலையை அடையும்” தொடர்ந்து வாசிக்க…)