(எம். காசிநாதன்)
தனியார் தொழிற்சாலைக்கு எதிரான 23 வருடகாலப் போராட்டம், இப்போது 13 பேர் உயிரிழந்த துயரமான துப்பாக்கிச்சூட்டில் வந்து நிற்கிறது. இந்தச் சோகத்தின் பிடியில், ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி சிக்கித் தவிக்கிறது. ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை எதிர்த்து, இது ஒரு நூறு நாள் போராட்டம் என்றாலும், 99 நாட்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று நடைபெற்ற போராட்டம் 100 ஆவது நாளில், ‘ஸ்டெர்லைட் தொழிற்சாலை முற்றுகை’ என்ற ஆவேசப் போராட்டமாக மாறியபோது, தமிழகப் பொலிஸ்துறை, அதைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போய் விட்டது.
(“தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’” தொடர்ந்து வாசிக்க…)