அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் குத்தேரஸ் வேண்டுகோள்

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார். சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.

(“அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் குத்தேரஸ் வேண்டுகோள்” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி

(கே. சஞ்சயன்)
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன.

(“சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்

மலையகத்தமிழர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டது தேசப்பற்றினால் இல்லை சமூக அந்தஸ்திற்காய்… :- தமிழ்க் கவி

சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்த நீங்கள் இதைச்சொல்லக்கூடாது அன்ரி. நீங்கள் எதுக்காக இயக்கத்துக்கு போனீங்க என்று கொஞ்சம் பின்னுக்குச்சென்று பாருங்க.

உங்களைப்போல சோத்துக்காக இயக்கத்துக்கு போனவங்கள் இல்லை வன்னிப்போராளிகள். பிறந்தது முதல் சுதந்திரக்காற்றை சுவாசித்து அந்த சுதந்திரத்திற்காய் இறுதிவரை உறுதிகுன்றாது போராடியவர்கள்.

(“தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்” தொடர்ந்து வாசிக்க…)

உரையரங்கு

“சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இலங்கை பெருந்தோட்ட மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிலைமைகள்”

என்ற தலைப்பில் மலையகத்தைச் சேர்ந்த கல்வி மற்றும் சமூக செயற்பாட்டாளர்

திரு.எஸ்.சந்திரசேகரன் அவர்கள் உரையாற்ற இருக்கிறார்.

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் கூட்ட அறை

(150, Borough Drive, Toronto, ON, M1P 4N7)

காலம்: 2018 ஏப்ரல் 13, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை

இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயற்பாட்டிற்கான அமையம் (Centre for Creative Thoughts and Action)

தொடர்புகளுக்கு: E-Mail: creathought1@gmail.com

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு

இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே . எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம். இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று

(“அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் மாநகர சபை செய்யவேண்டியவை

யாழ் மாநகரம் நுளம்பு குப்பைமேடு அசுத்தமான குடி நீர் நோய் எனதிணறுகிறது. குருநகர் நாவாந்துறை காக்கைதீவு பொம்மைவெளி மக்களின் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரு சுத்தமான கழிப்பறையை யாழ் நகரில் கண்டுபிடிக்க முடியாது. நகருக்கு வருபவர்கள் உடல் உபாதைகளை அவஸ்தைகளை சகித்தாக வேண்டும். அனால் பெரும் எதிர்பார்ப்புடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகரசபையில் சிலர் சமாதி கட்டுவதற்கும் சிலைகட்டுவதற்கும் மிருகசாலை அமைப்பதற்கும் பரிந்துரை செய்கிறார்கள். வடக்கு மாகாண சபை போல் மாநகரசபையும் கீழ்வாந்து போய்விடக்கூடாது. மாநகர சபை 4 ந்தர கபடதாரி அரசியல் செய்யும் இடமல்ல. இந்த மாதிரி தான் ஆரம்பம் என்றால் யாரும் மாநகர சபைக்கு உதவ முன் வர மாட்டார்கள்.
இப்படியான அராஜக போக்குகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தார்மீக அற சமூக பிரக்ஞை கொண்ட உறுப்பினர்கள் பெருமளவில் மாநகர சபையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த திருகுதாள விளையாட்டுகளுக்கு இடமளிக்க கூடாது.

(Sritharan Thirunavukarsu)

”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-

(எஸ். ஹமீத்)

குற்றவாளியை விடுவிக்க தேசியக் கொடியுடன் ஊர்வலம்! அவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு. நிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள். அந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.
காஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.
பெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.

(“”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-” தொடர்ந்து வாசிக்க…)

காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா

 

காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து, ஆவேசமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

(“காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா” தொடர்ந்து வாசிக்க…)

சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது எள்ன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் சீமான் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

(“சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்

(மொஹமட் பாதுஷா)
‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும். எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன.

(“மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)