பொங்கு தமிழும் எழுக தமிழும்; தடுமாறும் தமிழர் அரசியல்

(இலட்சுமணன்)

தமிழர் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில், போராட்டத்தின் கொள்கை முரண்பாடுகளாலும் போராட்ட வன்முறைகளாலும் சிதறுண்ட தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளை ஸ்திரப்படுத்தவும், தமிழர்களின் போராட்டம் நியாயமானது உண்மையானது, உணர்வுபூர்வமானது என்பதை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழீழ விடுதலைப் புலிகள், வெகுஜனப் போராட்டமாக ‘பொங்கு தமிழ்”ஐ ஏற்படுத்தினர்.