மகாபாரதம் சீரியல் பற்றி……!

நடத்தட்டும். பாஞ்சாலி 5 வரை மணந்தது சரியே என்று சொல்லி நடத்தட்டும். குந்தி தேவி மணமாகும் முன்பே தாயானது நாம் வணங்கும் சூரிய தேவன் அருளால் என சொல்லி நடத்தட்டும்.
மாடு மேய்ப்பவன் நாடும் ஆள்வான் என சொல்லித் தரட்டும். கடவுளே கண்முன் இருந்தாலும் , பகை , பொறாமை, நில அபகரிப்பு, சூழ்ச்சி இவைகளை அவரால் தடுக்க இயலாது என்பதை சொல்லித் தரட்டும்.
ராமன் சிவனை வழிபட்டான் என சொல்லித் தரட்டும். அப்படியானால் அவன் கடவுள் அல்ல என்ற உண்மையை சொல்லித் தரட்டும். பெண்ணை மானபங்கப்படுத்திய கதை தெரியப்படும் . பெண்ணை சந்தேகிக்கும் சராசரி ஆண் என்பது தெரியட்டும்.
பகுத்தறிவு உள்ள ஆசான் இவைகளை மறைக்க இயலாது.
மாணவன் மேலும் மேலும் முட்டாள் ஆகாமல்
இந்தக் கதைகளை அறிந்து ஆராய்ந்து புறந்தள்ளுவான்.(Kanniappan Elangovan)