இலங்கை ஏறாவூரில் ஒரே இரவில் 121 முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றது ஏன்? என்ன நடந்தது?

(ஜாஹிரா)

படக்குறிப்பு,புலிகளின் துப்பாக்கி சூட்டின் போது வயிற்றில் பாய்ந்த குண்டினால் இன்னும் அவதிப்படுவதாக ஜாஹிரா கூறுகிறார்.

(எழுதியவர்,யூ.எல். மப்றூக்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் – இலங்கை அரசு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, இலங்கை – ஏறாவூர் ‘சுஹதாக்கள் பேரவை’யின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் கோரிக்கை விடுக்கின்றார்.