முள்ளிவாய்க்கால் பேரவலம் நிறைவடைந்து மே.18 ஆம் திகதியுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. வடக்கு,கிழக்கு, கொழும்பு மற்றும் கடல் கடந்த நாடுகளில், நினைவு தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தங்களுடைய உறவுகளுக்குத் தீப சுடரேற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால், கண்ணீர் மழையில் நனைந்தது.