எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்து, நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த மிக மோசமான வீதி விபத்தாகும். சுற்றுலா சென்று திரும்பிய தனியார் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.