அதுல திலகரத்ன மாயம்?

4 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எம்.அதுல திலகரத்ன என்பவர் வெசாக் போயா தினத்தில் இருந்து பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது மே.2 அன்று விடுவிக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது.