இந்தியா சென்றார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று அதிகாலை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.