”இனி கடைசி பென்ச் என்ற முறை இல்லை”

தமிழக பாடசாலைகளின் வகுப்பறைகளில் ‘ப’ வடிவத்தில் இருக்கைகளை மாற்றி, மாணவர்களை அமரவைக்குமாறு பாடசாலைக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடைசி பென்ச் என்ற நடைமுறை இருக்கக் கூடாது என்றும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.