(Siraj Mashoor)
இலங்கையில் 103 ஆறுகள் இருக்கின்றனவாம்.
பிரதான ஆறுகள் அனைத்துமே சமகாலத்தில் நிறைந்து வழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடிய காட்சிகளை இம்முறைதான் கண்ணால் கண்டோம்.
பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் ஏக காலத்தில் திறக்கப்பட்டன. மஹாவெலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னரான அணைக்கட்டுகளின் வான் கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டது, மலைநாட்டில் பெரும் சவாலாக மாறியது.
