இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்: முழு விபரம்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் சுமார் மூன்று வாரங்கள் தங்கி, சாலை வழியாக நேபாளத்திற்குச் சென்று, தப்பிக்க கிட்டத்தட்ட ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.