உண்ணாவிரதிகளை பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை 6 மணிக்கு நடத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.