’கருநிலம் பாதுகாப்பு’ போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம்  காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த  விழிப்புணர்வு போராட்டம் புதன்கிழமை (6) அன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.