கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்பு களில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (23) அன்று மாலை திருகோணமலை கடற்கரையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது. இதனை திருகோணமலை நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.