சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதி பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதையடுத்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60இற்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.