இன்று சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தின் ஊடாக ஆகக் குறைந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் இன்னும் அதிகரிக்கும் இது நல்ல விஷயம் என்றாலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இந்த சட்டமூலத்தில் எவ்விதமான பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எமது அணியின் உறுப்பினர்கள் திருத்தங்களை சமர்ப்பிப்பர் என்றார்.