“படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுத் தரவும்”

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.