ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது செப்டெம்பரில் கூடவுள்ளபோது பலஸ்தீன அரசொன்றை அவுஸ்திரேலியா அங்கிகரிக்கவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். யுத்த சூனிய வலயமாக்கல், பொதுத் தேர்தல்களை நடாத்துதல், இஸ்ரேல் இருக்கும் உரிமையை தொடர்ந்து அங்கிகரித்தல் உள்ளடங்கலான கடப்பாடுகளை பலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து அவுஸ்திரேலியா பெற்றதாக அல்பானிஸ் கூறியுள்ளார்.