பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

இஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.