விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.