கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார் என வத்திகான் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக போராடி வந்தார். அண்மையில் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. பல்லாயிரக்கணக்காணவர்களின் பிரார்த்தனையால் அதிலிருந்து போப் பிரான்சிஸ் மீண்டு வந்திருந்தார். எனினும் இன்று அவர் காலமானாதாக வத்திகான் அறிவித்துள்ளது.