ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்களில் நுழையும் போதும், வெளியேறும் போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.