விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் தற்போது முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற ஒரு குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.