ஒரு லிட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரித்தாலும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வேன் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்த முடியாத பெற்றோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.