ஷூஹதாக்கள் நினைவு தினம்

1990ஆம் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஷூஹதாக்கள் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (12)  ஏறாவூரில் அனுடிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகள் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில்  அதன் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவைத் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.