அன்புநிறைந்ததாயாருக்குஆழ்ந்தஇரங்கல்கள்…

(இராமச்சந்திர மூர்த்தி.பா)

குலம் அக்கா ஜோசப்பின் வேதநாயகம் அவர்கள் 11.07.2019 அன்று யாழ்நகரில் மாரடைப்பால் காலமானார்
என்பதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்….

1960 மற்றும் 1970களில் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் களச்செயற்பாட்டாளராக விளங்கியவர். குலம் அக்காவினுடைய பிள்ளைகள் பாசத்திற்குரிய தங்கை கௌரி,நளினி ஆகியோர் உள்ளிட்ட அவருடைய பிள்ளைகள் அனைவருமே அவரைப்போல் போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர்கள்.

அதனால் அவருடைய குடும்பம் சிறை வாழ்க்கை ,சித்திரவதை என்று பல துன்ப துயரங்களைச் சந்தித்தது.
ஓருகாலத்தில் அவர்களினுடைய வீடு
போராட்டத் தலைவர்வர்களான பிரபாகரன், உமாமகேஸ்வரன், தோழர் பத்மநாபா போன்றவர்கள் பாதுகாப்பாக வந்து தங்கிப்போகுமிடமாகவும் இருந்தது.
புஸ்பராணி அவர்களின் “அகாலம்” நூலிலும் புஸ்பராஜா அவர்களின் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்னும் நூலிலும் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குலம் அக்காவின் குடும்பத்தின் பங்களிப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவர் வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சராய் இருந்த பாசத்திற்குரிய தோழர் வரதராஜப்பெருமாள் மற்றும் பாசத்திற்குரிய தோழர் மாவின் என அழைக்கப்படும் Roy tontan அவர்களின் மாமியாருமாவார்.

ஈழ மக்களின் அரசியல் பயணத்தில் பல தசாப்தங்களாக இணைந்து செயற்பட்டுவந்தவர் அன்புத் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் துயரில் நானும் எனது துணைவியார் எனது அன்பு பிள்ளைகள் ஆகியோரும் இணைந்து கொள்கிறோம்.

அன்புத் தாயாருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்…
தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
இந்த தாயாரின் கையால் நானும் உணவு உண்டிருக்கிறேன்…
அவ்வளவு பாசமுள்ள தாயாரின் இறுதி அஞ்சலி
அன்னாரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை 16 – 07 – 2019 அன்று காலை நடை பெறுகிறது.
இந்த இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை யே என்று மனம் வேதனைக் கொள்கிறது…

அன்புநிறைந்ததாயாரை இழந்து வாடும் அவரது குடும்பதினர்

அன்புத் தங்கைகள்
Gowry Perumal
Nalini Roy.

அன்புத் தோழர்கள்
Varathar Rajan Perumal
Roy Danton.

அன்பு மருமகள்கள்
Kannamma perumal.
Ragavadhini perumal.
Nelambari perumal.
Jennifar Niruthika Rai
Karthika Rai

ஆகிய அனைவருக்கும்…
மற்றும் தோழர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

என்றும் அன்புடன்….
இராமச்சந்திர மூர்த்தி.பா