ஈழ விடுதலை வரலாறு பற்றி…

இனி உண்மைகளை நேர்மையாகச் சொல்ல – எழுத எவராது முயன்றால் அவர்கள் அவமானத்தை – அனாவசியமான வசைகளை – எதிர்ப்புகளைத் தான் சம்பாதிப்பார்கள் இருக்கும் நண்பர்களையும் இழப்பார்கள்.

மலையகத் தமிழர்கள் பற்றி திம்பு பேச்சுவார்த்தையின் போது முன் வைக்கப்பட்ட கோரிக்கை பற்றி ஒருவரின் குறிப்பை முகநூலில் இன்று பார்த்த பொழுது இப்படி எழுதத் தோன்றியது. கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் இப்படி உணர்வு ஏற்பட்டது. இன்று இதை மட்டுமாவது எழுதி விடத் தோன்றியது. அவ்வளவுதான்.

ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் சார்ந்தவர்களையும் நிகழ்காலத்தில் தக்க வைப்பதற்கு ஏற்றபடிதான் வரலாற்றுக் குறிப்புகளை சொல்வது- எழுதுவது பொதுவான போக்கு. உண்மைகளை அறிவதற்கு அவற்றை கேட்கும் பொறுமையும், ஜீரணிக்கும் திறனும் வேண்டும்.