சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்ட இறுதிச்சமரை விபரிக்கிறார் Maj.Gen. கமால் குணரட்ண

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த …படையியினர் தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர். இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன்.

அதற்கேற்ப 4வது விஜயபாகு படைபிரிவின் கட்டளை அதிகாரியை அழைத்து தலா 8 பேர் கொண்ட இரண்டு படை அணிகளை தாக்குதலில் இறக்குமாறு அறிவுறுத்தினேன். அதி சிறப்பு தகமையும் துணிச்சலும் கொண்ட இந்த படையணிகளை கோப்ரல்களான விஜயசிங்க, முத்துபண்டா ஆகியோர் வழிநடத்தினர். அடுத்து வந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே சண்டையை அவர்கள் முடித்துவிட்டனர். என்னுடைய வாழ்நாளில் நான் முன்பு எப்போதுமே கேள்வி பட்டிருக்காத அந்த அற்புதமான, முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன்.

“ சேர், இப்போது நடந்த இந்த கடைசி சண்டையில் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்.” கேணல் ரவிபிரிய இதனை கூறினார். அப்போது சதுப்புநில பற்றைக்காட்டின் ஓரத்தில் கேணல் ரவிபிரிய, கேணல் சுத்தா பெரேரா, லெப்.கேணல் லாலந்த கமகே, லெப்.கேணல் திலக் ஹங்கிலிபொல ஆகியோர் நின்றுகொண்டிருந்தோம். மகிழ்ச்சி ததும்பிய அந்த இனிப்பான ஆனால் நம்பவே முடியாத அந்த செய்தியை ரவிப்பிரியவுக்கு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து கூறியவர் மேஜர் ரோஹித அலுவிஹார. “ அது பிரபாகரன்தானா? நன்றாக பாருங்கள்” என நான் அவர்களுக்கு கூறினேன்.

”சூரியன் சந்திரன் இருப்பது எவ்வளவு உறுதியான தகவலோ அதே போன்றதுதான் பிரபாகரனை நாம் கொன்றதும் சேர்.” என மறு முனையில் இருந்து எனக்கு பதில் வந்தது. இருந்தாலும் அந்த செய்தியை மேலும் உறுத்திபடுத்திக்கொள்ள விரும்பினேன். CDMA தொலைபேசியை எடுத்துக்கொண்டு கேணல் லாலந்த கமகேயை அந்த இடத்துக்கு சென்று செய்தியை உறுதிபடுத்துமாறு கூறினேன். அடுத்த 10வது நிமிடத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ சேர், அவர்கள் கூறியது சரி. அது பிரபாகரனேதான்.” செய்தியை உறுதிபடுத்தினார். “ உறுதியாக கூறுகின்றீர்களா?” நான் மீண்டும் கேட்டேன். இவ்வாறு நான் இரண்டாவது தடவையாக கேட்டபோது அவர் உண்மையிலேயே உறுதியாக.” எந்த மாற்றமும் இல்லை. இது பிரபாகரனேதான்” என்றார். “ சேர் விரைவாகவே இராணுவதளபதிக்கு அழைப்பு எடுத்து நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கூறுங்கள்” என அவர் உடசாகமாக எனக்கு கூறினார். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சதுப்பு பற்றைகளுக்குள் 200-300மீட்டர் தொலைவில் அவரது உடல் கிடந்தது. இருந்தாலும் இந்த பெறுமதிமிக்க, எனது வாழ்நாளிலேயே மிக நம்பக்கூடிய இந்த செய்தியை நானே நேரில் உறுதிபடுத்திக்கொள்ளாமல் இராணுவதளபதிக்கு கூற விரும்பவில்லை.

அவசரப்பட்டு இராணுவ தளபதிக்கு நான் இந்த செய்தியை கூறினால் அவர் பாதுகாப்பு செயலாளரருக்கு அறிவிப்பார். பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு செய்தியை கூறுவார். இவர்களில் யாரவது” எங்களுடைய வீரதீரமிக்க படையினர் பிரபாகரனை கொன்றுவிட்டனர்” என ஊடகங்களுக்கு கூறக்கூடும். ஒருவேளை அங்கே கொல்லப்பட்டு கிடப்பது பிரபாகரன் இல்லை எனறால் என்னாவது? நான் பொய்யான தகவலை இந்த நாட்டுக்கு கூறிய கேலிக்குரியவனாக இராணுவ கட்டமைப்பில் மாறிவிடுவேனே? அதன் பின் என்னை நானே வெடி வைத்துக்கொண்டு நந்திக்கடலுக்குள் குதித்து சாவதை தவிர எனக்கு வேறு வழியே இருக்காதே? எனவேதான் அந்த உடலை நான் நின்ற இடத்துக்கு கொண்டுவரும்படி லாலந்தவுக்கு கட்டளையிட்டேன். “ சேர் நாங்கள் அந்த உடலை கொண்டுவருகின்றோம். தயவு செய்து நீங்கள் உடனேயே இராணுவதளபதிக்கு கூறுங்கள்” என அவர் என்னை வற்புறுத்தினார். “

நான் இராணுவதளபதிக்கு கூறுகின்றேன். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் அந்த உடலை இங்கே கொண்டு வாருங்கள்” என கூறினேன். ஆனாலும் “ சேர் இது நிச்சயமாக பிரபாகரன்தான். நாங்கள் உடலை கொண்டுவருகின்றோம். நீங்கள் இராணுவதளபதிக்கு செய்தியை கூறுங்கள்” என விடாமல் என்னை வற்புறுத்தினார். சற்று எரிச்சலடைந்த நான்” நீங்கள் ஈமச்சடங்கை அங்கேயே செய்து கொண்டிருக்காமல் அந்த உடலை கடவுளுக்கு காட்டுவதற்காவது இங்கே கொண்டு வாருங்கள்.” என கடுமையாக கூறினேன். கடைசியில் தாமதமின்றி உடலை கொண்டுவர அவர் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்பு அவ்விடத்தில் அதிகாரிகளும் படையினரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய 5000 பேர் வரை அங்கே குழுமி இருக்கலாம் என ஊகிக்கின்றேன். நூற்றுக்கணக்கான படையினர் நாலாதிசைகளிலும் இருந்து எம்மை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர். பல்வேறு ஊடகங்களில் இருந்தும் செய்தியாலர்கள்கூட அங்கே வந்து விட்டனர்.

10 நிமிடம் கழித்து 4வது விஜயபாகு படையினர் லாலந்த கமகே ரோஹித் அலுவிகார ஆகியோர் தலைமையில ITNசெய்தியாளர் சுஜித் விதானபத்திரன மற்றும் ஒளிப்பதிவாளர் சாமல் ஆணந்த ஆகியோர் புடை சூழ சதுப்பு பற்றைகளுக்குள் இருந்து அந்த இராட்சசனின் உடலை சுமந்தபடி வெளிப்பட்டு எனது திசை நோக்கி வந்தனர். பற்றை காட்டுக்குள் இருந்து 4வது விஜயபாகு படையினர் வெளிப்பட்ட உடனேயே என்னை சூழ நின்று கொண்டிருந்த கிட்டதட்ட 5000 படையினரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எங்கள் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் எல்லைகளே இல்லை என நான் அந்த நொடியில் உணர்ந்தேன்.

துரோகியின் உடலை 4வது விஜயபாகு படையினர் கொண்டுவருவதை கண்ட படையினர் தன்னிலை மறந்து பரவசமாகி வானைநோக்கி வேட்டுகளை தீர்க்க தொடங்கிவிட்டனர். அவர்களின் T55 ரக துப்பாக்கியில் மாத்திரமல்லாமல் கனரக இயந்திர துப்பாக்கிகளில் இருந்தும் தோட்டாக்கள் மழையாக பொழிந்தன. அதிகாரிகள் சிலர் அதனை நிறுத்த முயன்றனர். ஆனாலும் தங்கள் மகிழச்சியை கொண்டாட அவர்களை அனுமதிக்குமாறு நான் அந்த அதிகாரிகளுக்கு சைகை காட்டினேன். இவர்கள் இந்தநாட்டின் புதல்வர்கள். திகதியிடப்படாத மரண சான்றிதலை கைகளில் வைத்துக்கொண்டு அவர்களுடைய நாட்டுக்காக போராடியவர்கள்.

இந்த அசுரனின் மரணத்துடன் அவர்களுக்கிருந்த மரண அழுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்ப்பதன் மூலம் அவர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் நாம் அதனை தடுக்க கூடாது என உணர்ந்தேன். துப்பாக்கி வேட்டுக்களின் பெரும் சத்தம் நந்தி கடல்நீரேரியெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. இப்போது நான் இதை எழுதும் போது பெருமை பொங்கிய அந்த முகங்களில் இருந்து பெரும் கௌரவத்தையும் பெருமையையும் உணர்ந்து கொள்கின்றேன்.

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal)