போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு

(இலட்சுமணன்)

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.