போர் மேகம் சூழ் உலகு

( Gopikrishna Kanagalingam)
இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் வர்ணிக்க முடியும். ஆனால், ‘போர் மேகம் சூழ் உலகு’ என்று சொல்வது, பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் பதற்றங்களும் அதிகரித்திருக்கும் சூழல் தான் காணப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைமை தான், இலங்கையின் புவியியலில் நெருக்கமான இரு நாடுகளுக்குமிடையிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும், புவியியல் ரீதியாக நெருக்கமானவை மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவை.