மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.