சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…

சம்பந்தனுக்கு கண்ணீர், மக்களிற்கு இரத்தம் வடிகிறது!!! எனும் தலைப்பில் வீ.ஆனந்தசங்கரியினால் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது, இதில் அரசியல் கைதிகள், முன்னால் போராளிகள், கணவனை இழந்த இளம் பெண்கள் பொன்றோரின் நிலையை அறிந்து, அவர்களிற்கு கிடைக்க வேண்டியதை பெற்று கொடுக்க அஎதிர் கட்சி தலைவராக ஏதாவது முயன்றுள்ளீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திரு.சம்மந்தன் ஐயா அவர்கள் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட வேளை கண்கள் கனிந்து கண்ணீர் முட்டியதாக வந்த செய்தி எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எமது பிள்ளைகள் சிறையில் விடுதலை பற்றிய கனவு கண்டு கொண்டு பல தடைவ ஏமாற்றமடைந்து விரக்தியுடன் இருக்கும் அரசியல்கைதிகளை நினைத்து வராத கண்ணீர், காணாமல் போன உறவுகளின் நிலையறியாது, நாளும் பொழுதும் கண்ணீருடன்வாழும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் கதறி அழும்போது வராத கண்ணீர், யுத்தத்தின் இறுதி நாட்களில் அம்மக்களை விடுவிக்க வந்த சந்தர்ப்பத்தை நளுவ விட்டுவிட்டடோம் என்ற குற்ற உணர்வில் வரவைக்காத போது இன்று மட்டும் தேசிய கீதம் தமிழில் பாடபட்டபோது எப்படி கண்கள் பனித்தன என்பது ஆச்சரியமானதே.

இதுவரை காலமும் மேலே குறிப்பிட்ட சம்பவங்களில், குறிப்பிடப்பட்டவர்கள் சிந்திய கண்ணீர்கள் ஆறாக பெருக்கெடுக்க கூடியதாகும். சுதந்திர தினநிகழ்வில் கலந்து கொள்ளாது, ஏதேனும் ஒரு பொது இடத்தில்; இருந்து கொண்டு கண்ணீரை அரசுக்கு காட்டியிருந்தால், அரசு மனதை கரைத்திருக்கும். தாங்கள் செய்தது வெறும் கேலிக்குரியது என்பது பொதுவான மக்கள் கருத்துக்கள். புதவியை துறப்பதாக கூறியிருந்தாலும், ஓர் பெரிய சாதனையைசெய்து காட்டினார் என புகழ்தனும் கிடைத்திருக்கும் அல்லவா? இன்றய கால கட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆயிர கணக்கான மாற்று திறனாளிகள், பல்லாயிரம் புணர்வாளிக்கப்பட்ட முன்னால் போராளிகள், பல ஆணஅரசியல் கைதிகள்; நிலை தொடர்பில் என்றாவது ஒருநாள் சிந்தித்து கண்ணீர் வடித்தது உண்டா என தங்களை கேட்க விரும்புகிறேன்.

இன்றும் பல முன்னாள் போராளிகள் வேலை வாய்ப்புகளிற்காக காத்திருப்பதும், கல்வி தகமை இருந்தும் அவர்களிற்கான தொழிலை பெற்று கொள்ள முடியாதவாறு தத்தளிப்பதையும் நான் கண்டு வருகிறேன். மாற்று திறனாளிகளாக்கப்பட்டு மற்றொருவருடைய உதவியுடன் எஞ்சிய காலத்தினை கழிக்கும் பல்லாயிரம் இளைஞர் யுவதிகள், கணவனை இழந்த இளம் பெண்கள் தொடர்பில் தாங்கள் எதிர்கட்சி தலைவராக பதவி ஏற்று பல மாதங்கள்கடந்துள்ள நிலையில் அரசிற்கு எவ்வாறான அழுத்தத்தினை கொடுக்க தங்களால் முடிந்தது? அது உங்கள் கடமை அல்லவா? மக்களின் பசியைதீர்க்க என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செய்யுங்கள்.ஆதை விடுத்து சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைபக்கு கண்ணீர் வடிப்பதால் எவ்விதபயனும் மக்களிற்கு, குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளிற்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கும், அவர்களின் உறவுகளிற்கும்.கிடைக்க போவதில்லை என்பதை தாங்கள் உணர்ந்து செயற்படுவீர்கள் என நம்புகிறேன்.

(ஆனந்தசங்கரி)