பிரபாகரனை அழைக்கும் விக்னேஸ்வரன்

ஐயா உங்கள் கைகளுக்கு எட்டிய தமிழ் மக்கள் பேரவையை நீங்கள் திறம்பட தலைமைதாங்கி செயற்படுத்தி இருந்தால் வடக்கில் இன்று ஏது ஐயா இராணுவம் .? மீண்டும் எதற்கு ஐயா ஒரு பிரபாகரன் .? தமிழ் காங்கிரஸின் தவறான அரசியலால் தந்தை செல்வா எவ்வாறு அங்கிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை நிறுவினாரோ அதே போன்று நீங்களும் கூட்டமைப்பின் மிகத் தவறான அரசியலால் அங்கிருந்து வெளியேறி மக்கள் பேரவை என்ற மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்புவீர்கள் என்றே பலரும் எதிர்பார்த்தனர். தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு இப்போது பிரபாகரனை அழைப்பதில் சரியான அரசியல் இருப்பதாக தோன்றவில்லை. எது எப்படியாயினும் உங்களுக்கு அரசியலை விட ஆன்மீகமே மிகவும் பொருத்தமானதும் சிறப்பானதுமாகும் என்பது எனது அண்மைய கணிப்பாகும்.

(Brin Nath)